சீனாவின் கெப்பிட்டல் எயார்லைன்ஸ் (Capital Airlines) பெய்ஜிங்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான தனது நேரடி விமானச் சேவையை இன்று (31) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
முதலாவது விமானத்தின் வருகை:
பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Beijing Daxing International Airport) புறப்பட்ட JD-487 என்ற முதலாவது விமானம், இன்று பிற்பகல் 1.46 மணியளவில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.


