போலி மதச்சார்பின்மையை பேசிக்கொண்டு, தொடர்ந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்து வருவது திமுக என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் அடிப்படை மத உரிமைகளில் தலையிடுவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தில், திமுக அரசின் நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவை எனவும், இதனை மக்கள் நன்கு கவனித்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

