இலங்கையை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகத்தின் பிராந்திய கேந்திர நிலையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காக, தேவையான சட்ட, ஒழுங்குமுறை மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உருவாக்க அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Gem Sri Lanka 2026 கண்காட்சி
கொழும்பில் உள்ள Shangri-La ஹோட்டலில், இன்று (07) நடைபெற்ற “Gem Sri Lanka 2026” இரத்தினக்கற்கள் வர்த்தக கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இலங்கை நிலைத்த மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் துறை
- சர்வதேச பங்களிப்பை அதிகரிப்பதிலும்
- பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதிலும்
முக்கிய பங்கை வகிக்கக்கூடிய திறன் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் துறையை மேம்படுத்துவதன் மூலம், ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.


