உள்ளூர் செய்திகள்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் விசேட பயண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. பயண நேரங்கள் மற்றும் கட்டணம்: முக்கிய அறிவித்தல்: இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடல் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறமாட்டாது. எனவே, யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகத் தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நாளை […]

உள்ளூர் செய்திகள்

இந்தியாவிடம் சிக்கிய ‘பொடி லஸ்ஸி’ இன்று அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்!

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (Interpol) தலையீட்டைத் தொடர்ந்து, அவர் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் கைத்தொலைபேசி செயலிகள் (Apps) தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்கவும், நிதி மோசடிகளைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைக்கான முக்கிய காரணங்கள்: மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளதன் படி, பின்வரும் காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன: மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள்: சட்டவிரோத நிதி […]

உள்ளூர் செய்திகள்

100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (23) முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். முக்கிய தகவல்கள்:

விளையாட்டு செய்திகள்

பல்லேகலவில் இன்று தீப்பறக்கும்! இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

2026 டி20 உலகக்கோப்பையின் மிக முக்கியமான கட்டமான சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில், இணை நடத்தும் நாடான இலங்கையும், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தும் இன்று (22) மோதுகின்றன. கண்டியின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாதத் தொடக்கத்தில் பல்லேகலவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இலங்கை 3-0 என இழந்திருந்தது. அந்தத் தோல்விக்குச் சொந்த மண் மற்றும் உள்ளூர் […]

கிழக்குக்கு இனிப்பான செய்தி: ‘மீனகயா’ இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!

ரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான “மீனகயா” (Meenagaya Night Mail) இரவு நேர புகையிரத சேவை, எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பயணிகளின் வசதிக்காக பின்வரும் கால அட்டவணையின் கீழ் சேவைகள் இடம்பெறவுள்ளன: புதிய நேர அட்டவணை: 1. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு (23.02.2026 முதல்): 2. மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு (24.02.2026 முதல்): மட்டக்களப்பு மார்க்கமான புகையிரத பாதைகள் […]

உள்ளூர் செய்திகள்

🚨 மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ‘டிலைட்’ எனும் வர்த்தகர் உயிரிழப்பு!

கந்தர, தெவுந்தர பகுதியில் பல்பொருங் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். டிலைட் என அழைக்கப்படும் 55 வயது வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபராக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர். மோட்டார் வண்டியில் வந்த இருவர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

சிலாபத்தில் கடற்படையினரின் அதிரடி: 1400 கிலோ பீடி இலைகள் சிக்கின!

சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடற்படையினரும் கடலோர பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 1407 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் கட்டுரைகள்

மொழிகளின் சங்கமம்! இன்று சர்வதேச தாய்மொழி தினம்.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. 2000மாம் ஆண்டுக்கு பின்னர் அது உலகளவில் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. நிலையான சமூக கட்டியெழுப்பலுக்கு கலாசார மற்றும் பல் மொழி கலாசாரம் அத்தியாவசியமானதென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு தினத்தை கொண்டாடுவதற்கான முதல் யோசனையை பங்களாதேஸ் முன்வைத்திருந்தது. குறித்த நாடு தாய்மொழியை […]

உள்ளூர் செய்திகள்

🚨 நிலச்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட மக்கள் அவதானம்!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது. இன்று (21) காலை 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை காலை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds