கல்விக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்து ஆண்டுக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கேற்ப தரமுயர்த்தவும், சர்வதேசமயப்படுத்தவும் இந்த ஒத்துழைப்புகள் அவசியம் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் கீழ், கல்வி மற்றும் ஆய்வு ஒத்துழைப்புகள், மாணவர்–விரிவுரையாளர் பரிமாற்றம், ஒருங்கிணைந்த ஆய்வுகள், செயலமர்வுகள் மற்றும் மாநாடுகள் ஆகியவை முன்னெடுக்கப்படவுள்ளன.

