இலங்கை–பாகிஸ்தான் 3வது T20 போட்டி இன்று தம்புள்ளையில்
தம்புள்ளை:
இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், பாகிஸ்தான் அணி தற்போது 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வெற்றி பெற்றது.
இரண்டாவது T20 போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது, அதனால் பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலைமையால், இரண்டாவது போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் வாங்கிய ரசிகர்கள், இன்றைய (11) மூன்றாவது போட்டியை இலவசமாகக் காண இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வாய்ப்பு வழங்கியுள்ளது

.

