மிஹிந்தலை நாயக்க தேரரை “காட்டுமிராண்டி” என விமர்சித்த அமைச்சர் கே.டி. லால் காந்தவின் கருத்துக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில், அதன் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்தச் சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் ஆவேசமாக உரையாற்றினார்.


