நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

