தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தனது பதவியை இன்று (21) இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம் இன்று மாலை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
தனது இராஜினாமாவுக்கான காரணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக பிரதேச சபையின் நிர்வாகச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவரின் இந்தத் திடீர் விலகல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

