நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக, ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் சர்வதேச ரீதியாக முறைப்பாடுகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் தலையீட்டை கோரும் முன்னாள் எம்.பி.க்கள்: அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து, இவ்விடயத்தில் தலையிடுமாறு கோரி பின்வரும் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குறித்த சங்கம் தனிப்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளது:
- அமெரிக்க ஜனாதிபதி (டொனால்ட் ட்ரம்ப்)
- இந்தியப் பிரதமர் (நரேந்திர மோடி)
- ஜெனிவா மனித உரிமைகள் பேரவை
- சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU)
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர், முன்னாள் எம்.பி. பிரேமசிறி மானகே இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச தரப்பினருக்கு விரிவாக விளக்கமளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

