Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உலகச் செய்திகள்

இஸ்லாமாபாத்தில் இன்று வரலாற்றுச் சந்திப்பு

மத்திய கிழக்கில் கடந்த 40 நாட்களாக நீடித்து வரும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் போர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், நிரந்தர தீர்வை நோக்கிய இந்த நகர்வு முக்கியத்துவம் […]

உலகச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாகிஸ்தான்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் (ஏப்ரல் 11, சனிக்கிழமை) பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களுக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த 5 வாரங்களாக நீடித்த போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு மற்றும் விடுமுறை விபரங்கள்: இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

இன்று 5 இடங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கிறது. அதற்கமைய இன்று நண்பகல் 12.11 மணியளவில் பின்வரும் பிரதேசங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

உள்ளூர் செய்திகள்

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது பழி போட முயற்சி” – முஜிபுர் ரஹ்மான்!

நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி […]

உள்ளூர் செய்திகள்

எரிபொருள் பற்றாக்குறை இல்லை” – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு

நாட்டில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்றும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் மற்றும் இறக்குமதி குறித்த தற்போதைய நிலவரம் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார். ஜூன் மாதம் வரையிலான கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக எரிபொருள் கப்பல்களைத் தடையின்றி இலங்கைக்குக் கொண்டுவருவதற்காகப் பல வெளிநாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் […]

உலகச் செய்திகள்

எதிரியை மண்டியிட வைப்போம்” – பலித்தது கமேனியின் வாக்கு? ஈரானில் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவுடனான 5 வார காலப் போரில் ஈரான் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானிய சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் திகதி வெளியிட்ட ஒரு கருத்து இப்போது உண்மையாகியுள்ளதாக ஈரானிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26 அன்று உரையாற்றிய அயதுல்லா அலி கமேனி, “எதிரியை நாம் மண்டியிட வைப்போம்” (We will make the enemy kneel) […]

உள்ளூர் செய்திகள்

புதுப்பொலிவு பெற்றது புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்! இன்று திறப்பு

நீண்டகாலமாகப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த கொழும்பு, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand) நவீன வசதிகளுடன் இன்று (08) முதல் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் நேரடி மேற்பார்வையில், “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் இந்த நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: புத்தாண்டுப் பயணிகளுக்கு நிம்மதி: சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து சுமார் 15 இலட்சம் பயணிகள் கிராமங்களுக்குச் செல்வார்கள் என […]

உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள்: கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலிருந்து […]

உலகச் செய்திகள்

இன்று இரவு ஒரு நாகரிகத்தின் முடிவாக இருக்கலாம்” – ட்ரம்ப்பின் அதிரடி எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘TruthSocial’ தளத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான பதிவு, மத்திய கிழக்கில் ஒரு பாரிய உலகப்போர் மூளும் அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க நேரப்படி இன்று இரவு ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்க ஒரு இரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள பதிவில், “அமெரிக்க நேரப்படி இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும்” என மிகவும் எச்சரிக்கையான தொனியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஒரு பேரழிவு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், […]

உள்ளூர் செய்திகள்

புதன்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுமா?

த்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய போது அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை நீக்குவது […]