நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத்திற்கான பின்னணி: இலவச சுகாதார சேவையைப் பாதுகாத்தல் மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. விலக்கு அளிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள்: […]




