உள்ளூர் செய்திகள்

மினுவங்கொடையில் அதிரடிச் சோதனை: T-56 துப்பாக்கி, 25 தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மினுவங்கொட பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, அதற்கான மெகசின், மேலும் T-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் T-56 தோட்டாக்கள் 25 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று (16) சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்

உள்ளூர் செய்திகள்

95 குற்றவாளிகளுக்கு ‘ரெட் நோட்டீஸ்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள இந்தக் குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இலங்கை […]

உலகச் செய்திகள்

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது. இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியது மற்றும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் திருத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இத்தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்டுள்ள எட்டு வழக்குகளில் மிக முக்கியமானது ‘அரச துரோகம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பு, கம்பஹா, காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

இலங்கையில் அதிகரித்து வரும் தொற்றாத நோய்களான (NCD) உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட சுகாதார வேலைத்திட்டத்தை கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார மட்டத்திலேயே நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக “Resolve to Save Lives” என்ற சர்வதேச நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக சுமார் 2.4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds