உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி வசமுள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்து விலகல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தனது பதவியை இன்று (21) இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம் இன்று மாலை உத்தியோகபூர்வமாக கையளித்தார். தனது இராஜினாமாவுக்கான காரணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக பிரதேச சபையின் நிர்வாகச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவரின் இந்தத் […]

விளையாட்டு செய்திகள்

2026 ICC T20 உலகக் கோப்பை கிண்ணம் இலங்கையில்

கொழும்பு | 21 ஜனவரி 2026 — 2026ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள ICC T20 உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, ICC T20 உலகக் கோப்பை கிண்ணத்தை (Trophy) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் அதிகாரப்பூர்வ “Trophy Tour” இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுடன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு IMF தொடர்ந்தும் ஆதரவு: சுவிட்சர்லாந்தில் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்ந்தும் வழங்கும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) மாநாட்டின் ஒரு அங்கமாக இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் இலங்கைப் பிரதமர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள்

மத விவகாரங்களில் கைவைக்க வேண்டாமென ஆட்சியாளர்களுக்கு ரணில் எச்சரிக்கை!

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் தொன்மையைப் பேணுவதற்கும் அரசியலமைப்பு ரீதியாகக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது, அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார். […]

இலங்கையில் வாகன விலைகள் அதிரடியாக வீழ்ச்சி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, புதிய வாகனங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், உள்நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் (Used Vehicles) விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த சில வருடங்களாக நிலவிய செயற்கையான விலை உயர்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, இந்தத் திடீர் விலை மாற்றத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன: சந்தை சமநிலை: இறக்குமதி கட்டுப்பாடுகளால் அதிகரித்திருந்த வாகனங்களின் விலை, தற்போது விநியோகம் சீரானதால் […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds