விளையாட்டு செய்திகள்

இலங்கை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி:

இலங்கை அணியுடனான விறுவிறுப்பான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று (19) காலை நாட்டை வந்தடைந்தது.

துபாயிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானம் மூலம் இன்று காலை 08:20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) மற்றும் இருபதுக்கு 20 (T20) தொடர்கள் நடைபெறவுள்ளன.

ஒருநாள் தொடர் (ODI Series) – கொழும்பு: அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.

  • 1வது போட்டி: ஜனவரி 22
  • 2வது போட்டி: ஜனவரி 24
  • 3வது போட்டி: ஜனவரி 27

T20 தொடர் – பல்லேகலை: T20 போட்டிகள் அனைத்தும் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.

  • 1வது போட்டி: ஜனவரி 30
  • 2வது போட்டி: பெப்ரவரி 01
  • 3வது போட்டி: பெப்ரவரி 03

வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு செய்திகள்

முஸ்தஃபிசுர் நீக்கம்: இரு நாடுகளிலும் பரபரப்பு

ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டமை, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி எடுத்த முடிவு, மேலும்
விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக விக்ரம் ராதோர்

இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) நிறுவனம், முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இருந்த விக்ரம் ராதோரை, இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக