முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை பண்டார ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்ற ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், அங்கு விசேட சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவரைக் கைது செய்தனர்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பணச்சலவை (Money Laundering) செய்தமை தொடர்பான தீவிர குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்:
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே தரமற்ற மருந்து கொள்வனவு வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அவரது உறவினர் பணச்சலவை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

