காலி, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

