சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடற்படையினரும் கடலோர பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 1407 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



