நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (23) முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முக்கிய தகவல்கள்:
- இன்று ஒரு நாளில் மாத்திரம் 1,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுக்கு நிகரான ஒரு இலட்சம் சிலிண்டர்கள் நாடெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
- 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (22) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. அதனைத் தரையிறக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதிலிருந்தே இந்த 300,000 சிலிண்டர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எதிர்வரும் பெப்ரவரி 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முறையே 3,900 மற்றும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவைத் தாங்கிய மேலும் இரு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

