யாழ்ப்பாணம் (வட்டுக்கோட்டை): அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை, பிப்ரவரி 12, 2026) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.
கண்ணீரில் நனைந்த இறுதி விடை
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சிறுவனின் உடல், இன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து, சிறுவனின் உடலைத் தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சவப்பெட்டியுடன் வீதியில் அமர்ந்து பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் ஏந்தியிருந்ததுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.


