ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள ‘பொது உரிமம் 134’ (General License 134) இன் கீழ் இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தடையின் முக்கிய அம்சங்கள்:
- தற்காலிக அனுமதி: கடலில் ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- காலக்கெடு: மார்ச் 12 ஆம் திகதிக்கு முன்னதாக கப்பல்களில் ஏற்றப்பட்ட எரிபொருட்களை எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
- இந்தியாவிற்கான சலுகை: முன்னதாக இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த 30 நாள் சலுகை, தற்போது ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- காரணம்: ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரானினால் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள விநியோகத் தடையைச் சீர்செய்து, உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
