மைத்ரி விக்ரமசிங்கவிடம் வீட்டிலேயே வாக்குமூலம்?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபா அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு சிஐடியினர் நேற்று (20) அழைப்பு விடுத்திருந்தனர்









