விளையாட்டு செய்திகள்

sports news update:பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு மிச்சமிருக்கா?

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மகா யுத்தத்தில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியினால் பாகிஸ்தான் அணி குரூப் ‘A’ புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், அவர்களது ‘சூப்பர் 8’ கனவு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது குரூப் ‘A’ பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாம் இடத்தில் 4 புள்ளிகளுடன் அமெரிக்கா […]

உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பச் செய்திகள்

Technology News (தொழில்நுட்பம்)  :AI கேலிச்சித்திரங்களுக்கு பின்னால் பதுங்கியிருக்கும் ஆபத்து

முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் தற்போது எங்கு பார்த்தாலும் வண்ணமயமான AI கேலிச்சித்திரங்கள் (AI Caricatures) ஆக்கிரமித்துள்ளன. ஒரு வழக்கறிஞர் கையில் சட்டப் புத்தகத்துடன் இருப்பது போன்றோ அல்லது ஒரு பொறியியலாளர் தனது உபகரணங்களுடன் இருப்பது போன்றோ உருவாக்கப்படும் இந்த “Personalized Digital Caricature” படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால், இந்த ஒரு நிமிட வேடிக்கை உங்கள் வாழ்நாள் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக முடியலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர் ஹரித தனநாயக்க எச்சரிக்கிறார். உயிரியல் […]

உள்ளூர் செய்திகள்

ஜிந்துப்பிட்டியவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி. 🔴 மேலதிக விபரங்களுக்கு எமது செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.

உள்ளூர் செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா நகரம், கந்தபளை, நானுஓயா மற்றும் லிந்துலை போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் வீதிகளில் சில அடி தூரத்திற்கு அப்பால் உள்ள காட்சிகளைக்கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை வீதிகளில் நிலவும் தெளிவற்ற காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட போக்குவரத்துப் பொலிஸார், சாரதிகளுக்குப் […]

உள்ளூர் செய்திகள்

லியங்கஹவெலயில் சோகம்: கல் குவாரிக்குள் சிக்கிய இரு தொழிலாளர்கள் – சடலங்களை மீட்க இராணுவம் விரைவு

பண்டாரவளை: பண்டாரவளை – பூனாகலை வீதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் இன்று (14) இடம்பெற்ற பாரிய மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்தது எப்படி? லியங்கஹவெல, மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல் குவாரியில் இன்று வழமை போல் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, பாறைகளை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் (Blasting) போது, எதிர்பாராதவிதமாக பாரிய அளவிலான மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் செய்திகள்

பொரளையில் சோகம்: மாநகர சபை ‘பெக்கோ’ மோதி பாடசாலை மதில் சரிந்தது – 3 மாணவர்கள் படுகாயம்!

பொரளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சுற்றுமதில் சுவர் இன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான இயந்திரம் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விபரங்கள்: கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்குச் சொந்தமான பெக்கோ (Backhoe) இயந்திரம் ஒன்று இன்று காலை பாடசாலைக்கு அருகில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் பாடசாலையின் மதில் சுவருடன் மோதியுள்ளது. இந்த […]

விளையாட்டு செய்திகள்

டி20 உலகக் கிண்ணம்: ஓமானுக்கு 226 ஓட்டங்கள் இலக்கு – குசல், பவன், தசுன் அதிரடி!

கண்டி: 2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஓமான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், இலங்கை அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 225 ஓட்டங்களைக் குவித்துள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே ஓமான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களைப் பெற்று வலுவான அடித்தளமிட்டார். குசல் மெண்டிஸைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் பவன் ரத்நாயக்க, நிதானமாகவும் அதேநேரம் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் சோகம்: பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்துடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் (வட்டுக்கோட்டை): அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை, பிப்ரவரி 12, 2026) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. கண்ணீரில் நனைந்த இறுதி விடை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சிறுவனின் உடல், இன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து, […]

உள்ளூர் செய்திகள்

மக்களுடன் மக்களாக ஜனாதிபதி அநுர!

நுவரெலியா பயணத்தின் போது, நாணுஓயா பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்குள் நேரடியாகச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்த தொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் சம்பள உயர்வு மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds